THIRUKURAL

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

Nanbar u_m_a_r

உமர் ஜி என்று நினைத்த உடன் நினைவுக்கு வருவது
அவரின் இனிமையான குரலில்
நாங்கள் தினமும் ரசித்து மகிழும் பாடல்கள் மட்டுமே.

அது மட்டும் அல்லாமல்
அவரின் சிரிக்க வைக்கும் பேச்சும்
எங்கள் அறைக்கு வரும் அனைவரின்
மனதையும் கட்டி இழுக்கும்.

இன்னும் உமர் ஜி பற்றி சொல்ல வேண்டுமானால்
இவர் பேசும்போது வரும் குரலை வைத்து பலர்
இவரை கொஞ்சம் வயதானவர் என்று மதிப்பிடுவர்,
ஆனால் பாடும் போது மட்டும் அந்த குரலுக்கு எங்கிருந்துதான் வருகிறதோ அந்த இனிமை...

உமர் ஜி எங்கள் TN 6 ன் “கானக்குயில்”.

No comments: